Friday, December 14, 2007

கோயில் சோத்துக்கு.....

வாழ்க்கையிலே பல பேரைப் பார்க்கிறோம். நம்மைச் சுற்றிய உலகின்நிகழ்வுகளைக் காண்கிறோம், வாழ்க்கை நிலையாமை பற்றி நமது முன்னோர்கள்சொல்லாதது இல்லை. ஆனால் வாழ்க்கையின் வேகத்தில் நிலையாமையைநம் மனத்தில் நிற்பது இல்லை. திருவள்ளுவரும், திருமூலரும், இன்னபிற நமது சேயோர்களும் சொன்னதெல்லாம் நமக்கு நினைவுக்கு வராவிடிலும், இந்தப் பழமொழி நினைவில் நிற்கக் கூடும் என்று எண்ணுகிறேன்.

பழமொழிகளைப் படித்து விட்டு என் அருமை நண்பர் ஒருவர் அனுப்பிவைத்த பழமொழி இது:

"கோயில் சோத்துக்கு குமட்டிண தேவடியா
காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா"

(காடி = மாடு குடிக்கும் தண்ணீர்/கழுநீர்த் தொட்டி)

தேவடியா என்பதற்கு வேசி என்ற பொருளை மட்டும் கொண்டுஇதைப் படித்தால் இதன் ஆழம் புரியும்.

வேசி புகழில் இருக்கும் போது அவளிற்கு இருக்கும் வருவாயும்,வாழ்க்கை உயர்வும்(?) கோயிலில் போடப்படும் சோற்றைக் கண்ட/கேட்டமாத்திரத்தில் குமட்டச் செய்யுமாம். "உவே...." என்று மூக்கைப்பிடிக்க வைக்குமாம்.
அதே அவளின் சந்தை மலிவாகி இல்லாமல் போன காலத்தில்மாட்டுத் தொட்டியில் ஊற்றப்படும் கழுநீர், வடி கஞ்சி, வடி கஞ்சியோடுவிழுந்த சோறு, பழைய சோறு ஆகியவவை கிடைத்தாலே போதும்என்று, அதற்கே கரணம் போடத் தயாராக இருப்பாளாம்.

வேசிக்கு மட்டுமல்லாமல் இன்றைக்கெல்லாம் திடீர்-நவ-நாகரீகச் சூழல் அல்லது வேலை, அல்லது புகழ் போன்ற இவற்றில் சிக்கிக் கொள்கிற சில் ஆடவர் பெண்டிருக்கும் இப்பழமொழியைப் பொருத்திப் பார்க்கலாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

1 comment:

nayanan said...
This comment has been removed by the author.