Thursday, November 29, 2007

மயிரைக் கட்டி....

"மயிரைக் கட்டி மலையை இழுப்போம்...
வந்தால் மலை - போனால் மயிரு"

இந்தப் பழமொழி/சொலவடையை தந்தை பெரியார்
பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிந்திருக்கின்றேன்.

இதே கருத்தில்லாவிடிலும், இதன் வகையில்ஒரு பழமொழி:

"பட்டா படையாச்சி...படாட்டி மானியாச்சி".

மானின்னா என்னன்னு கேட்கிறீர்களா?

நாம் தயங்கித் தயங்கி சொல்லவோ
எழுதவோசெய்கிறோமே "ஆண்குறி" என்று - அதற்கானசொல்.

சரி மானி என்றால் என்னன்னு சொல்லியாயிற்று.

அப்ப படை என்றால் என்ன என்று யோசித்துப்
பொருள் புரிந்து கொள்ளுங்கள் :-)

ஆத்துகிட்டே கோவிச்சுக்கிட்டு.....

சின்ன சின்ன கோபங்கள், வெறுப்புகள்,
ஏலாமைகள் ஒருவனைத் தூண்டி விடும்போது,
அல்லது சின்னச் சின்ன எரிச்சல்கள்,
ஏரணம் இல்லாத தயக்கங்களும்,
கோபங்களும் ஒருவரை ஆளும்போது,
தனக்குப் பிடித்த ஒன்றாக இருந்தாலும்
அதை விட்டுத் தள்ளிப் போய்விடுகிறார்கள்.

அதனால் இழப்பிருப்பினும் வீம்புக்கென்றே
அதனை இறுமாப்பாக தள்ளிவிடுகிறார்கள்.

இது காலம் கடந்து யோசிக்கும்போது
எவ்வளவு முட்டாள்தனம் என்பதைப்
பல நேரங்களில் உணர்த்துவதாக இருக்கும்.

அம்மாதிரியான சூழலில் இந்தப் பழமொழியை
எண்ணிக் கொண்டால் சிரிப்பு வந்து விடுவது மட்டுமல்ல சிந்தனையும் வந்துவிடத்தான் செய்கிறது.

"ஆத்துகிட்ட கோவிச்சுக்கிட்டு
சூத்து கழுவாம இருந்தால் எப்படி?"

என்று ஒரு முறை வறட்டு வீம்பின் பிடியின் மனம் இருக்கும் போது சொல்லிப் பாருங்கள். ஒரு வேளை வீம்பு விலகினாலும் விலகிவிடும்.

ஆத்துகிட்ட = ஆறுடன்.நீரோடும் ஆற்றின் மருவல்.

அன்புடன்
நாக.இளங்கோவன்